Breaking News
அமெரிக்க அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்துடன் இலங்கை கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஜனவரி 01 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அணு மற்றும் பிற கதிரியக்க பொருட்களை சட்டவிரோதமாக கொண்டு செல்வதை தடுப்பது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்துடன் இலங்கை கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஜனவரி 01 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு ஏற்கனவே சட்டமா அதிபரிடமிருந்து அனுமதி பெற்றுள்ளதுடன், இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை சபை, இலங்கை அணுசக்தி வாரியம், வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசியத் திட்டமிடல் திணைக்களம் ஆகியனவும் இந்த வரைவை மீளாய்வு செய்துள்ளன.