Breaking News
அக்டோபர்.4ஆம்திகதி ஜெய்சங்கர் சிறிலங்கா பயணம்
கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எந்தவொரு வெளியுறவு அமைச்சரும் கொழும்புக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாக இது இருக்கும்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இவ்வாரம் சிறிலங்காவுக்கு வருகை தரவுள்ளதாகவும், எதிர்வரும் 23 ஆம் திகதி புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எந்தவொரு வெளியுறவு அமைச்சரும் கொழும்புக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாக இது இருக்கும்.
அக்டோபர் 4 ஆம் திகதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஜெய்சங்கரின் அண்டை தீவு தேசத்திற்கான விஜயம், திசாநாயக்க ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உயர்மட்ட ஈடுபாடுகளை உள்ளடக்கும் என்பதால் உன்னிப்பாக கவனிக்கப்படும்.