Breaking News
தேசபந்து தென்னகோன் மீதான இடைக்கால உத்தரவை நீக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது
இந்த தலையீட்டு மனு, நீதிபதிகள் யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் நேற்று (18) நிராகரித்துள்ளது.
இந்த தலையீட்டு மனு, நீதிபதிகள் யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த உத்தரவை அறிவித்த நீதிபதி குழாம் தலைவரான நீதியரசர் யசந்த கோதாகொட, இடைப்பட்ட மனுவில் உள்ள உள்ளடக்கம் வழக்கை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.