சரக்கு கப்பல் மீது ஹவுத்தி ஏவுகணை தாக்குதல்: 2 இலங்கையர்கள் மீட்பு
தாக்கப்பட்ட கப்பலில் இருந்த 20 பணியாளர்கள் மற்றும் மூன்று ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்டு இந்தியப் போர்க்கப்பல் மூலம் ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் உள்ள ஜிபூட்டியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஏடன் வளைகுடாவில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையால் தாக்கப்பட்ட 'ட்ரூ கான்ஃபிடன்ஸ்' என்ற வணிகக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
ஏடன் துறைமுகத்தில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள லைபீரிய நாட்டிற்கு சொந்தமான பார்படாஸ் கொடியிடப்பட்ட சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 பேர் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த ஒருவர் என 3 மாலுமிகள் கொல்லப்பட்டனர். முக்கிய கப்பல் பாதைக்கு எதிரான ஏமன் குழுவின் தாக்குதலில் முதல் பொதுமக்கள் உயிரிழப்பு இதுவாகும்.
இந்த தாக்குதலில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பின்னர், தாக்கப்பட்ட கப்பலில் இருந்த 20 பணியாளர்கள் மற்றும் மூன்று ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்டு இந்தியப் போர்க்கப்பல் மூலம் ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் உள்ள ஜிபூட்டியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.