Breaking News
சிங்கப்பூரின் பன்னாட்டு மத்தியஸ்தர் குழுவின் உறுப்பினராக முன்னாள் தலைமை நீதிபதி ரமணா நியமிக்கப்பட்டுள்ளார்
சிங்கப்பூர் பன்னாட்டு மத்தியஸ்த மையத்தின் தலைவர் ஜார்ஜ் லிம், ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூரில் அவருக்கு நியமனக் கடிதம் வழங்கினார்.
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி என்வி ரமணா சிங்கப்பூர் பன்னாட்டு மத்தியஸ்த மையத்தின் புகழ்பெற்ற பன்னாட்டு மத்தியஸ்தர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் பன்னாட்டு மத்தியஸ்த மையத்தின் தலைவர் ஜார்ஜ் லிம், ஆகஸ்ட் 29 அன்று சிங்கப்பூரில் அவருக்கு நியமனக் கடிதம் வழங்கினார்.
சிங்கப்பூரின் சட்ட அமைச்சகம், பன்னாட்டு வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் (UNCITRAL) மற்றும் 20 க்கும் மேற்பட்ட கூட்டாளர் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர மாநாட்டான ‘சிங்கப்பூர் மாநாட்டு வாரத்தில்’ நீதிபதி ரமணா பங்கேற்றார்.
நீதிபதி ரமணா சிங்கப்பூர் பன்னாட்டு மத்தியஸ்த மையம் மற்றும் நான்கு முன்னணி இந்திய மல்டி நேஷனல் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.