பெங்களூரு கபே குண்டுவெடிப்பு: 2 பேரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு: தேசியப் புலனாய்வு அமைப்பு அறிவிப்பு
ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டை வைத்ததாகக் கூறப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் மற்றும் இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டியதற்காக அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு கபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகக் குற்றவாளிகள் இருவர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசியப் புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டை வைத்ததாகக் கூறப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் மற்றும் இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டியதற்காக அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இணை சதிகாரர்களில் ஒருவரான முசம்மில் ஷெரீப்பைத் தேசியப் புலனாய்வு அமைப்பு மார்ச் 28 அன்று கைது செய்தது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் கடந்த 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். கடிகாரத்தைப் (டைமரைப்) பயன்படுத்தி ஐஇடி குண்டைத் தூண்டுவதன் மூலம் இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.