Breaking News
காதலியின் குடும்பத்தினரால் டெல்லியில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை
இந்தச் சம்பவம் முழுவதும் அப்பகுதியில் உள்ள காட்சிப் பதிவுத் தொலைக்காட்சிக் (சிசிடிவி) கேமராவில் பதிவாகியுள்ளது.
தில்லியின் ஜாஃப்ராபாத்தில் திங்கள்கிழமை 25 வயது வாலிபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார், என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சல்மான், பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கழுத்து மற்றும் மார்பில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முழுவதும் அப்பகுதியில் உள்ள காட்சிப் பதிவுத் தொலைக்காட்சிக் (சிசிடிவி) கேமராவில் பதிவாகியுள்ளது.
தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மூன்று குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க குழுக்களை நியமித்துள்ளனர்.