பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளைச் சிறிலங்கா எடுக்க வேண்டும்: ரஷ்ய தூதுவர்
சிறிலங்கா பிரிக்ஸ் அமைப்பில் இணைய வேண்டுமானால் அது ரஷ்யாவின் விவகாரம் மட்டுமல்ல; அனைத்து உறுப்பு நாடுகளும் உடன்பட வேண்டும், அது நடப்பதற்கு முன்னர் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது," என்றார்.

பிரிக்ஸ் கூட்டணியில் சிறிலங்கா இணைய விரும்பினால் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் என சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஜாகர்யன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான பன்னாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், ரஷ்யாவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவை வழங்கி வருகின்றன, ஆனால் இலங்கை தரப்பிலிருந்து போதுமான நலன்களை அவர் காணவில்லை என்று கூறினார்.
பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர், இந்த விடயம் தொடர்பில் தன்னிடம் பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூதுவர் லெவன் எஸ்.ஜாகர்யன் கருத்துத் தெரிவிக்கையில், "கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நான் ஜனாதிபதி அநுரகுமார் திசாநாயக்கவை சந்தித்து பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்காவுக்கு அழைப்பு விடுத்த ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்புக் கடிதத்தை என்னுடன் கொண்டு வந்தேன். நான் ஒரு மொழி மொழிபெயர்ப்பாளருடன் பேசினேன், ஆனால் மொழிபெயர்ப்பு துல்லியமானதா என்று எனக்குத் தெரியவில்லை. எதிர்வரும் பொதுத் தேர்தல் காரணமாக தன்னால் ரஷ்யாவுக்குச் செல்ல முடியாது என்று ஜனாதிபதி என்னிடம் கூறினார். சிறிலங்கா பிரிக்ஸ் அமைப்பில் இணைய வேண்டுமானால் அது ரஷ்யாவின் விவகாரம் மட்டுமல்ல; அனைத்து உறுப்பு நாடுகளும் உடன்பட வேண்டும், அது நடப்பதற்கு முன்னர் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது," என்றார்.
சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் ஜகார்யன், தற்போது தான் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும், எனவே பிரிக்ஸ் அமைப்பில் இணைவது குறித்து இலங்கை தீவிரமாக இருந்தால் சில நடைமுறை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.