வெறுங்காலுடன் சென்ற பெண்களைக் கண்டு ஆந்திரா கிராமம் முழுவதற்கும் காலணிகளை அனுப்பினார் பவன் கல்யாண்
குடியிருப்பாளர்களுடன் உரையாடும் போது, காலணிகள் இல்லாத பங்கி மித்து என்ற வயதான பெண்ணை அவர் கண்டார். கிராமத்தில் பலர் வெறுங்காலுடன் இருப்பதையும் அவர் கவனித்தார்.

ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வயதான பெண்கள் உட்பட பலர் வெறுங்காலுடன் நடந்து செல்வதைக் கவனித்த பின்னர் அனைத்துக் குடியிருப்பாளர்களுக்கும் செருப்புகளை அனுப்பினார்.
அண்மையில் அரக்கு மற்றும் தும்பிரிகுடா பகுதிகளில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது, பவன் கல்யாண் ஏ.எஸ்.ஆரின் தும்பிரிகுடா மண்டலத்தில் உள்ள பெடபாடு கிராமத்திற்கு சென்று உள்ளூர்ப் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்களுடன் உரையாடும் போது, காலணிகள் இல்லாத பங்கி மித்து என்ற வயதான பெண்ணை அவர் கண்டார். கிராமத்தில் பலர் வெறுங்காலுடன் இருப்பதையும் அவர் கவனித்தார்.
இதனால் மனம் நெகிழ்ந்த துணை முதல்வர் உடனடியாக கிராமத்தின் மக்கள் தொகை குறித்து விசாரித்தார். அங்கு சுமார் 350 பேர் வசித்து வருவதை அறிந்த அவர், அனைவருக்கும் செருப்புகளை ஏற்பாடு செய்யுமாறு தனது அலுவலகத்திடம் கேட்டார். விரைவில் காலணிகள் வழங்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.