Breaking News
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் மீது வழக்கு
ஜனதாதிகார சங்கர்ஷ சங்கதானேவைச் சேர்ந்த ஆதர்ஷ் ஐயர் என்பவர் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறிப்பதாக நிர்மலா சீதாராமன் மற்றும் பிறருக்கு எதிராகப் புகார் அளித்தார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப் பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனதாதிகார சங்கர்ஷ சங்கதானேவைச் சேர்ந்த ஆதர்ஷ் ஐயர் என்பவர் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறிப்பதாக நிர்மலா சீதாராமன் மற்றும் பிறருக்கு எதிராகப் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.