Breaking News
பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்த சிறிலங்கா- ஜப்பான் இடையே பேச்சுவார்த்தை
கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் இடம்பெற்ற சந்திப்பின் போது சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்த்தல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சிறிலங்காவும் ஜப்பானும் வலியுறுத்தியுள்ளன.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாடானி ஆகியோருக்கிடையில் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் இடம்பெற்ற சந்திப்பின் போது சிறிலங்காவுக்கும் ஜப்பானுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.