Breaking News
இஸ்ரேலில் இலங்கையர்கள் எவரும் காயமடையவில்லை
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், சிறிலங்காத் தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சிறப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

இஸ்ரேலில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஈரான் மேற்கொண்ட தொடர் ட்ரோன் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இலங்கையர்கள் எவரும் காயமடையவில்லை என இஸ்ரேலிலுள்ள சிறிலங்காத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், சிறிலங்காத் தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சிறப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்கவும், இந்த தாக்குதல்களின் போது பாதிப்புகளை தவிர்க்க அனைத்து உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவும் இஸ்ரேலுக்கான சிறிலங்காத் தூதுவர் நிமல் பண்டார கேட்டுக்கொண்டார்.