கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பெண்களுக்கு கணவரின் கையொப்பம் தேவையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
"கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க கணவனிடம் அனுமதி கோரும் நடைமுறை, பெண் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு நல்ல சகுனமாக இல்லை. இந்த நடைமுறை ஆணாதிக்க வெறிக்கு சற்றும் குறைந்ததல்ல" என்று நீதிபதி கூறினார்..

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் கணவரிடம் அனுமதி பெற்று கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரேவதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் இந்த தீர்ப்பை வழங்கினார். அவர் தனது கணவரிடமிருந்து கையொப்பத்தை வற்புறுத்தாமல் காலக்கெடுவுக்குள் புதிய கடவுச்சீட்டை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரினார்.
திருமணத்திற்குப் பிறகு மனுதாரர் தனது தனித்துவத்தை இழக்க மாட்டார் என்றும், ஒரு மனைவி எப்போதும் கணவரின் அனுமதி அல்லது கையொப்பம் இல்லாமல் எந்த வடிவத்திலும் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். "கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க கணவனிடம் அனுமதி கோரும் நடைமுறை, பெண் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு நல்ல சகுனமாக இல்லை. இந்த நடைமுறை ஆணாதிக்க வெறிக்கு சற்றும் குறைந்ததல்ல" என்று நீதிபதி மேலும் கூறினார்..
மனுதாரர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, மற்ற தேவைகளை பூர்த்தி செய்தால் அவரது பெயரில் கடவுச்சீட்டு வழங்க மண்டலக் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்தச் செயல்முறை நான்கு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி மேலும் கூறினார்.