Breaking News
யூகோன் முதல்வர் ரஞ்ச் பிள்ளை பதவி விலகல்
முதல்வராக (premier) இருந்த இரண்டு ஆண்டுகளை “எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம்” என்று அவர் கூறினார்.

யூகோன் முதல்வர் ரஞ்ச் பிள்ளை பதவி விலகுவதாக அறிவித்தார்.
புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் நீடிக்க திட்டமிட்டுள்ளதாக ரஞ்ச் பிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதல்வராக (premier) இருந்த இரண்டு ஆண்டுகளை “எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம்” என்று அவர் கூறினார். “ஆனால் அந்தப் பொறுப்பில் தனது காலம் முடிவுக்கு வந்துவிட்டது” என்றார்.
ரஞ்ச் பிள்ளை ஜனவரி 2023 முதல் முதல்வராக பணியாற்றி வருகிறார். முன்னாள் முதல்வர் சாண்டி சில்வர் பதவி விலகியதை அடுத்து லிபரல் தலைமைக்கு அவர் போட்டியின்றித் தேர்வானார்.