உ.பி.யை சேர்ந்த காதலன் தனது டச்சு காதலியை இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார்
இருவரும் புதன்கிழமை (நவம்பர் 29) இந்து முறைப்படி அனைத்து திருமணச் சடங்குகளையும் முடித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் வர்மா (32), நெதர்லாந்தைச் சேர்ந்த தனது காதலி கேப்ரியேலா துடா (21) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் புதன்கிழமை (நவம்பர் 29) இந்து முறைப்படி அனைத்து திருமணச் சடங்குகளையும் முடித்தனர்.
ஃபதேபூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஹர்திக், வேலைக்காக நெதர்லாந்துக்கு சென்றிருந்தார். அவர் ஒரு மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பெற்றார், அங்கு அவர் தனது சக ஊழியரான கேப்ரியலாவை சந்தித்தார். மூன்று வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த முடிவை அவர்கள் ஹர்திக்கின் பெற்றோருடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டனர்.
கடந்த வாரம், ஹர்திக் கேப்ரியேலாவுடன் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார், அங்கு அவர்களை அவரது குடும்பத்தினர் அன்புடன் வரவேற்றனர். திருமண விழாவில் கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.