Breaking News
பீகாரில் பெண் மற்றும் அவரது 5 வயது மகள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு
உயிரிழந்தவர்கள் அனிதா தேவி (29) மற்றும் அவரது மகள் சோனி குமாரி என அடையாளம் காணப்பட்டனர்.

பீகாரின் பக்சர் மாவட்டத்தில் ஒரு பெண்ணும் அவரது ஐந்து வயது மகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
பல்லாபூர் கிராமத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் இரு உடல்களும் கண்டெடுக்கப்பட்டன என்று பக்சர் காவல் துறைக் கண்காணிப்பாளர் மணீஷ் குமார் கூறினார். அவர்கள் கூரிய ஆயுதத்தால் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
உயிரிழந்தவர்கள் அனிதா தேவி (29) மற்றும் அவரது மகள் சோனி குமாரி என அடையாளம் காணப்பட்டனர்.
"ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து சில பொருட்களை மீட்டுள்ளனர், அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சரியான காரணம் தெரியவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று காவல் துறைக் கண்காணிப்பாளர் கூறினார்.