தமிழக கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவைக் கண்டித்துக் கிராம மக்கள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டல்
கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் கிராமத்தின் அருகே உள்ள 300 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழாவின் போது தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் நுழைய முயன்றதைக் கண்டித்து அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவின் போது, தலித் கிராம மக்கள் ஒரு குழு கோவிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் இந்து கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது.
இதனிடையே, கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டியலின/ பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலித் உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற மாநில அமைச்சர் பொன்முடியையும் அணுகினர். தலித்துகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து கிராம மக்கள் கோவிலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், தங்களது அரசு அடையாளங்களான ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள் போன்றவற்றை திருப்பி அளிக்கவும் அவர்கள் முயற்சி செய்தனர்.