100 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைக்க நீரூற்று நீரை நெஸ்லே எடுத்தது
நெஸ்லே நிறுவனம் சரியான உரிமையின்றி தண்ணீரைத் திருப்பியதாகவும், நியாயமற்ற முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் கூறுகின்றன.
100 ஆண்டுகளுக்கும் மேலாக மலை நீரூற்றுகளில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீரை திருப்பி பாட்டில்களில் அடைத்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாட்டில் தண்ணீர் அரோஹெட் என்ற பெயரில் விற்கப்படுகிறது. அதன் லேபிள் " 1894 முதல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் அது தண்ணீர் வணிகத்தை விற்றது. நெஸ்லே வாட்டர்ஸ் வட அமெரிக்கா ப்ளூ ட்ரிட்டன் பிராண்ட்ஸ் என்ற புதிய பெயரில் செயல்படத் தொடங்கியது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1 ஆம் தேதிக்குள் சான் பெர்னார்டினோ மலைகளில் உள்ள பெரும்பாலான நீர் சேகரிப்பு தளங்களில் இருந்து பாட்டிலுக்கு தண்ணீர் எடுப்பதை நிறுத்துமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. வாரியத்திடம் முறையிட 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
நெஸ்லே வாட்டர்ஸ் வட அமெரிக்காவிற்கு எதிராக தனிமனிதர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல புகார்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் கையெழுத்திட்ட மனுவைப் பெற்ற பின்னர், 2015 இல் வாரியம் விசாரணையைத் தொடங்கியது.
நெஸ்லே நிறுவனம் சரியான உரிமையின்றி தண்ணீரைத் திருப்பியதாகவும், நியாயமற்ற முறையில் தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் கூறுகின்றன.
டஜன் கணக்கான விசாரணைகள் உட்பட எட்டு வருட விசாரணைக்குப் பிறகு, ப்ளூ ட்ரைட்டனுக்கு தண்ணீரைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று வாரியம் செவ்வாயன்று தீர்மானித்தது.
125 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வாறு செய்து வருவதாகக் கூறியது . மேலும் நிலத்தடி நீரை தான் எடுத்துக் கொள்கிறது என்றும், நிலத்தடி நீரை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில நீர் வாரியத்திற்கு இல்லை என்றும் வாதிட்டது.
இந்த உத்தரவை தடுக்க வழக்கு தொடரப்போவதாக ப்ளூ ட்ரிட்டன் தெரிவித்துள்ளது.