காணாமல் போன ஹெலிகாப்டர் ஊழியர்கள் இருவர் சடலமாக மீட்பு
காணாமல் போன இரு பணியாளர்களும் செவ்வாய்கிழமை மாலை இறந்து கிடந்ததாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை கிழக்கு ஒன்றாரியோவில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் காணாமல் போன இரண்டு விமானப் பணியாளர்கள் இறந்ததை கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பயிற்சி விமானத்தில் நான்கு கனேடிய ஆயுதப் படை உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற சிஎச்-147எப் சினூக் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கேரிசன் பெடவாவா அருகே ஒட்டவா ஆற்றில் விழுந்ததாக த் தேசியப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போன இரு பணியாளர்களும் செவ்வாய்கிழமை மாலை இறந்து கிடந்ததாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். அவர்களது பெயர்களை வெளியிட வேண்டாம் என அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தேசியப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மற்ற இரண்டு பணியாளர்களும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது.
"இந்தக் கடினமான நேரத்தில் இறந்த இரண்டு உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், எஞ்சியிருக்கும் இரண்டு விமானக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், 450 ஸ்க்ராட்ரன் மற்றும் கேரிசன் பெடவாவாவின் உறுப்பினர்களுக்கும் முழு அளவிலான ஆதரவு வழங்கப்படுகிறது" என்று அது ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.