Breaking News
பெங்களூரு-மைசூர் விரைவுச் சாலையில் வேக ரேடார்கள் நிறுவப்பட்டுள்ளன
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லாத வாகனங்களைக் கண்டறிய இராமநகரக் காவல் துறை ஏற்கனவே வேக ரேடார் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது
பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையில் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், வேக ரேடார் துப்பாக்கிகள் மற்றும் இலக்கத் தகடுகளை (நம்பர் பிளேட்டு) அடையாளம் காணும் காட்சிப்பதிவுக் கருவிகளைக் (கேமராக்கள்) காவல் துறை நிறுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லாத வாகனங்களைக் கண்டறிய இராமநகரக் காவல் துறை ஏற்கனவே வேக ரேடார் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது என்று போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) அலோக் குமார் தெரிவித்தார். மாண்டியா மற்றும் மைசூர் காவல் துறை வரும் நாட்களில் இதைப் பயன்படுத்தத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.