Breaking News
பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கைது – காவல்துறையினர் எந்த தவறும் செய்யவில்லை: அலஸ்
அவரை கைது செய்ததில் காவல்துறை அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.பொ.த சாதாரண தர பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அருகில் கூட்டமொன்றை நடாத்திய காரணத்தினால், அவரை கைது செய்ததில் காவல்துறை அதிகாரிகள் எந்த தவறும் செய்யவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
“எம்.பி.யின் சந்திப்பு நடந்த இடத்திற்கு வந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் அடையாளத்தை நிறுவி அடையாள அட்டையையும் காட்டியுள்ளனர். எனினும், எம்.பி., அவர்களைக் கையாள முயன்றார். மேலும், எம்.பி., தகாத வார்த்தைப் பிரயோகம் செய்தார்,'' என, அமைச்சர் கூறினார்.
"எல்லாவற்றையும் பெற்றவுடன் அனைத்து காணொலிக் காட்சிகளையும் சபையில் தாக்கல் செய்வேன்" என்று அமைச்சர் கூறினார்.