கடன் நெருக்கடியைக் குறைக்க உதவும் வகையில் சீனச் சுற்றுலாவுக்குச் சிறிலங்கா வரவேற்பு
சீனச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறிலங்கா ஆலோசித்து வருவதாக அதன் சுற்றுலா அமைச்சர் தெரிவித்தார்.
தெற்காசிய நாடு பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முயற்சித்து வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத கடன் நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியில் சீனச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறிலங்கா ஆலோசித்து வருவதாக அதன் சுற்றுலா அமைச்சர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில் நாடு அரை மில்லியன் சீனச் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளது. இது கோவிட்-க்கு முந்தைய பார்வையாளர்களின் அளவை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்துகிறது என்று சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ திங்களன்று பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஒவ்வொரு சீனச் சுற்றுலாப்பயணியும் $5,000 செலவிட்டால், அது சமீபத்திய பன்னாட்டு நாணய நிதியத்தின் பிணை எடுப்புடன் ஒப்பிடக்கூடிய ஒரு எண்ணிக்கையை உயர்த்தக்கூடும் என்று அவர் கூறினார். "நீங்கள் உண்மையிலேயே பார்த்தால், சுற்றுலாத்துறையால் இந்த குழப்பத்தில் இருந்து சிறிலங்காவை மீட்டெடுக்க முடியும்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.