Breaking News
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தேர்தலை இலக்காகக் கொண்டவை அல்ல: நிதி இராஜாங்க அமைச்சர் உறுதி
இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் குறுகிய கால பிரபல்யத்திற்காகவோ அல்லது தேர்தலை இலக்காகக் கொண்டோ தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்தினார்.
பல சவால்களுக்கு மத்தியில் குறுகிய காலத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று சிறிலங்காவின் நீண்ட கால வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவும் வரவு செலவுத் திட்டம் நாளை (13.11.2023) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் குறுகிய கால பிரபல்யத்திற்காகவோ அல்லது தேர்தலை இலக்காகக் கொண்டோ தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்தினார்.
மேலும், மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் நிரந்தர வேலைத்திட்டம் நாளை (13.11.2023) முன்வைக்கப்படும் என சியம்பலாபிட்டிய வலியுறுத்தினார்.