Breaking News
மின்சார துறை சீர்திருத்த திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
இந்த சட்டமூலத்தை ஏப்ரல் கடைசி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று விஜேசேகர கூறினார்.
மின்சார துறை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் திருத்த வடிவத்திற்கு அமைச்சரவை திங்களன்று (8) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய புதிய மின்சார துறை சட்டமூலத்தின் திருத்தப்பட்ட வடிவத்தை வர்த்தமானியில் பிரசுரித்து அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்தை ஏப்ரல் கடைசி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று விஜேசேகர கூறினார்.
இதேவேளை, சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 02 வாரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.