மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விரிவான அபிவிருத்தி திட்டத்திற்கு பிரதமர் உறுதி
அபிவிருத்தித் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தினரும் மற்றும் அரச ஊழியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டு வருட நீண்ட கால விரிவான அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக தொகுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
விவசாயம், கால்நடைகள் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளை இலக்காகக் கொண்டு பொருத்தமான அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குணவர்தன வலியுறுத்தினார்.
அபிவிருத்தித் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்கு அனைத்து சமூகத்தினரும் மற்றும் அரச ஊழியர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய ஒருமைப்பாடு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சியான “அளுத் கமக்-அளுத் ரதக்” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.