லடாக்கில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கூட்டணிக்குப் பெரிய வெற்றி
26 இடங்களைக் கொண்ட லடாக் கவுன்சிலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் பாஜகவை மிகவும் பின்தங்கியுள்ளன.
2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல் வாக்கெடுப்பில், கார்கில் லடாக் தன்னாட்சி மலை கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கூட்டணி பாஜகவை தோற்கடித்தது .
26 இடங்களைக் கொண்ட லடாக் கவுன்சிலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகள் பாஜகவை மிகவும் பின்தங்கியுள்ளன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 22 இடங்களில் காங்கிரஸ் 8 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 11 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக 2 ல் மட்டுமே வென்றது , ஒரு இடம் சுயேட்சை வேட்பாளருக்கு கிடைத்தது.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில், கார்கில் தேர்தலில் என்சி மற்றும் காங்கிரஸ் போன்ற மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் பிடிபி போட்டியிடவில்லை.