அரசியலையும் விளையாட்டையும் தனித்தனியாக வைக்க ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல்
கொண்டாட்டத்தின் போது, சிங்கள விளையாட்டுக் கழகத்தின் 125 ஆண்டுகால வரலாற்றை ஆவணப்படுத்தும் நினைவு புத்தகம் வெளியிடப்பட்டது,
கிரிக்கெட்டின் சம்பியன் என்ற அந்தஸ்தை இலங்கை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த இலக்கை அடைவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
நேற்று முந்தா நாள் (28) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற சிங்கள விளையாட்டுக் கழகத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, அரசியலுக்கும் விளையாட்டுக்கும் இடையில் பிரிந்து நிற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். விளையாட்டுக் கழகங்களில் அரசியல்வாதிகள் உயர் பதவிகளை வகிப்பதைத் தடுப்பது ஆரோக்கியமான விளையாட்டுச் சூழலுக்கு பங்களிக்கும் என்று அவர் பரிந்துரைத்தார்.
கொண்டாட்டத்தின் போது, சிங்கள விளையாட்டுக் கழகத்தின் 125 ஆண்டுகால வரலாற்றை ஆவணப்படுத்தும் நினைவு புத்தகம் வெளியிடப்பட்டது, அதனுடன் ஒரு அஞ்சல் தலையும் சிறப்பு உறையும் வெளியிடப்பட்டது.
பன்னாட்டுக் கிரிக்கெட்டில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிங்கள விளையாட்டுக் கழகத்தின் வீரர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டினார். விளையாட்டு சமூகத்தின் ஒற்றுமை மற்றும் தோழமையை அடையாளப்படுத்தும் வகையில் வீரர்களுடன் ஒரு குழுப் புகைப்படத்தையும் ஜனாதிபதி எடுத்துக் கொண்டார்.