Breaking News
ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் மீதான நாடாளுமன்ற விவாதத்திற்கு தேதி நிர்ணயம்
குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி முதல் ஜுன் 23ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகம் தொடர்பான சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) விவாதிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.