இந்திய வம்சாவளித் தொழிலதிபரின் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கனடா காவல்துறை விசாரணை
சர்ரேயில் உள்ள லட்சுமி நாராயண் மந்திரின் தலைவர் சதீஷ் குமாரின் மகன் வீட்டில் புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரேயில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் வெளியான தகவல்கள் குறித்து கனடா காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சர்ரேயில் உள்ள லட்சுமி நாராயண் மந்திரின் தலைவர் சதீஷ் குமாரின் மகன் வீட்டில் புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
சர்ரேயில் ஜூன் 18 அன்று காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்டதற்கு எதிராக அதன் உறுப்பினர்கள் கடந்த மாதம் நீதிக்கான சீக்கியர்கள் என்ற பிரிவினைவாதக் குழுவின் போராட்டத்தை எதிர்கொண்டபோது இந்தக் கோயில் செய்திகளில் இருந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டிசம்பர் 27-ஆம் தேதி அதிகாலை ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலை சர்ரே ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (ஆர்.சி.எம்.பி) விசாரித்து வருகிறது.
புதன்கிழமை காலை சுமார் 8:03 மணியளவில், சர்ரே ஆர்.சி.எம்.பி 80 அவென்யூவின் 14900 பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு பதிலளித்ததாக சர்ரே காவல்துறையின் ஊடக தொடர்பு அதிகாரி கான்ஸ்டபிள் பர்ம்பிர் கஹ்லோன் தெரிவித்தார்.
"இந்த சம்பவத்தின் போது யாரும் காயமடையவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட வீடு துப்பாக்கிக் குண்டுத் துளைகளுடன் சேதம் அடைந்தது" என்று குடியிருப்பாளர்களின் அடையாளத்தை வெளியிடாமல் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.