தண்டர் வளைகுடாவில் 13 பழங்குடியினரின் மரணம் குறித்து ஒன்றாரியோ மாகாண காவல்துறை மறுவிசாரணை செய்கிறது
இந்த வழக்குகள் முன்பு தண்டர் பே காவல்துறைச் சேவையால் விசாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஒரு அறிக்கையில், மீண்டும் விசாரிக்கப்பட வேண்டியதாக அடையாளம் காணப்பட்டது.
ஒன்றாரியோ மாகாண காவல்துறை தண்டர் பேயில் 2006 மற்றும் 2019 க்கு இடையில் 13 பழங்குடியினரின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது.
ஒன்றாரியோ மாகாண காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பில் டிக்சன் செவ்வாயன்று, சுதந்திரமான மறு விசாரணைகள் நடந்து வருவதாகவும், மாகாணத்தின் தலைமை வழக்குரைஞரின் (அட்டர்னி ஜெனரல்) வேண்டுகோளின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினார். இந்த வழக்குகள் முன்பு தண்டர் பே காவல்துறைச் சேவையால் விசாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஒரு அறிக்கையில், மீண்டும் விசாரிக்கப்பட வேண்டியதாக அடையாளம் காணப்பட்டது.
இந்தப் புதிய விசாரணைகள் ஒன்றாரியோ மாகாண காவல்துறை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அமைப்பின் குற்றப் புலனாய்வுக் கிளையில் உள்ள ஒரு முக்கிய வழக்கு மேலாளரால் வழிநடத்தப்படுகிறது.