சிறிலங்காவில் வசதிகளை திறக்குமாறு இந்திய மருத்துவர்களிடம் இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள்
வருண் கார்டியோ மற்றும் நியூரோ சயின்சஸ் (விசிஎஸ்) மூலம் கோல்டன் ஹவர் திட்டத்தைத் தொடங்கிவைத்த பின்னர் ஆந்திரப் பிரதேசத்தில் விஜயவாடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
சிறிலங்கா வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இந்திய வைத்தியர்களுக்கு தமது வசதிகளை இலங்கையில் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார், நல்ல மருத்துவமனைகளை தொடங்குவதற்கு அனைத்து அனுமதிகளையும் உரிமங்களையும் வழங்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.
வருண் கார்டியோ மற்றும் நியூரோ சயின்சஸ் (விசிஎஸ்) மூலம் கோல்டன் ஹவர் திட்டத்தைத் தொடங்கிவைத்த பின்னர் ஆந்திரப் பிரதேசத்தில் விஜயவாடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார். சிறிலங்கா அமைச்சர், அனைத்து அனுமதிகளையும் வழங்குவதற்கு இலங்கை ஒத்துழைக்கும் என்று கூறினார். கொழும்பை தவிர வேறு எந்த நகரத்திற்கும் நிலம் ஒதுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்த இலங்கை அமைச்சர், இலங்கை குடிமக்களுக்கும் இதுபோன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றார்.