பாகிஸ்தான் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு
காவல்துறைக் கண்காணிப்பாளர் சஜித் சதோசாய் கூறுகையில், "கராச்சியின் சிவப்பு மண்டல பகுதியில் உள்ள இசிபி அலுவலகத்தின் சுவரில் ஒரு ஷாப்பிங் பையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு பொருட்களில் பந்து தாங்கு உருளைகள் (Ball bearings) காணப்படவில்லை.
கராச்சியில் உள்ள பாகிஸ்தான் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெற்கு மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) சாஜித் சடோசாய் தெரிவித்தார். வெடிப்பின் தீவிரம் மற்றும் தன்மையை மதிப்பிடுவதற்காக வெடிகுண்டு செயலிழப்புக் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
காவல்துறைக் கண்காணிப்பாளர் சஜித் சதோசாய் கூறுகையில், "கராச்சியின் சிவப்பு மண்டல பகுதியில் உள்ள இசிபி அலுவலகத்தின் சுவரில் ஒரு ஷாப்பிங் பையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு பொருட்களில் பந்து தாங்கு உருளைகள் (Ball bearings) காணப்படவில்லை.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், தெற்கு மாவட்ட கண்காணிப்பு மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்டக் கண்காணிப்பு அதிகாரியிடம் அறிக்கை கோரியுள்ளது. உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு இரு அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.