இஸ்தான்புல்லில் உள்ள இத்தாலிய தேவாலயத்தில் முகமூடி அணிந்த இருவர் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி
ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்து கொண்ட சி.டி என அடையாளம் காணப்பட்ட ஒருவர் ஆயுதத் தாக்குதலுக்குப் பிறகு இறந்துவிட்டதாக அமைச்சர் கூறினார்.
இஸ்தான்புல்லில் உள்ள இத்தாலிய தேவாலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மத சடங்கின் போது 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லின் சாரியர் மாவட்டத்தில் உள்ள சாண்டா மரியா தேவாலயத்தில் சுமார் 11:40 (0840 பன்னாட்டு நேரம்) மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாகவும், முகமூடி அணிந்த இரண்டு ஆட்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அலி யெர்லிகாயா சமூக ஊடகங்களில் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் கலந்து கொண்ட சி.டி என அடையாளம் காணப்பட்ட ஒருவர் ஆயுதத் தாக்குதலுக்குப் பிறகு இறந்துவிட்டதாக அமைச்சர் கூறினார்.
"இந்த மோசமான தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்" என்று அலி யெர்லிகாயா கூறினார்.