Breaking News
தெற்காசிய வணிகர்களை மிரட்டிப் பணம் பறித்த இந்திய-கனடியர் கைது
கனடாவின் பிராம்ப்டனில் வசிக்கும் ஹிதேஷ் பன்சால் பிராம்ப்டன் வணிக உரிமையாளர்கள், குடும்பங்கள் மற்றும் ஊழியர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கனடாவின் ஹமில்டன் நகரில் மிரட்டி பணம் பறிக்கும் தொலைபேசி அழைப்புகளை விடுத்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் பிராம்ப்டனில் வசிக்கும் ஹிதேஷ் பன்சால் பிராம்ப்டன் வணிக உரிமையாளர்கள், குடும்பங்கள் மற்றும் ஊழியர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பிப்ரவரி 12 அன்று கைது செய்யப்பட்ட பன்சால் தற்போது காவல்துறைக் காவலில் உள்ளார். பிராம்ப்டனில் உள்ள ஒன்றாரியோ நீதிமன்றத்தில் பிணை விசாரணை நிலுவையில் உள்ளது.