சிறிலங்கா பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலர்களைத் திருப்பி செலுத்துகிறது
ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் சிறிலங்கா மற்றுமொரு தவணையை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2021 செப்டெம்பர் மாதம் சிறிலங்கா எடுத்த 200 மில்லியன் டொலர் கடனில் இருந்து 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷ் பெற்றுள்ளது.
தெற்காசிய நாடு அப்போது அனுபவித்த அழுத்தமான அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக பங்களாதேஷ் வங்கியால் சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
சிறிலங்காவிடமிருந்து முதல் கொடுப்பனவு ஆகஸ்ட் 17 ஆம் திகதி பெறப்பட்டதாக பங்களாதேஷ் வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பேச்சாளருமான மொஹமட் மெஸ்பவுல் ஹக் திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் சிறிலங்கா மற்றுமொரு தவணையை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
"200 மில்லியன் டாலர் கடனை சிறிலங்கா செப்டம்பர் மாதத்தில் திருப்பிச் செலுத்தும் என்று பங்களாதேஷ் வங்கி எதிர்பார்க்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.