Breaking News
சிறிலங்காவில் சீரற்ற காலநிலை காரணமாக 77,000 பேர் பாதிப்பு
மோசமான வானிலை தொடர்பான சம்பவங்களின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை தொடர்பான சம்பவங்களின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர் என்று அது கூறியது.
821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் தற்போது அவசர நிவாரண நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வீடுகள் முழுமையாகவும் 265 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.