Breaking News
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்: ஜனாதிபதி உறுதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடன் நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் நேற்று (6) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என்றும், இதுபோன்ற துயர சம்பவம் நாட்டில் மீண்டும் ஏற்படாததை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடன் நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் நேற்று (6) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேவாலயத்திற்கு சென்ற அவர், உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். இதன்போது ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.