லெபனான், சிரியாவுக்கு பயண ஆலோசனை வழங்கப்பட்டது
டமாஸ்கசில் உள்ள சிறிலங்காக் கௌரவ தூதரகத்துடன் வழக்கமான தொடர்புகளைப் பேணுதல் உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கடுமையாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
லெபனான் மற்றும் சிரியாவில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை சிறிலங்காக் குடிமக்கள் லெபனான் மற்றும் சிரியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள அனைத்து சிறிலங்காக் குடிமக்களும் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் வெளிப்புற நடமாட்டங்களை கட்டுப்படுத்தவும், பெய்ரூட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் மற்றும் டமாஸ்கசில் உள்ள சிறிலங்காக் கௌரவ தூதரகத்துடன் வழக்கமான தொடர்புகளைப் பேணுதல் உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் கடுமையாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சல் ஐடி: slemb.beiruit@mfa.gov.lk அல்லது பின்வரும் அவசர ஹாட்லைன்கள் மூலம் வழக்கமான தொடர்பைப் பராமரிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
0094 771102510 - சனத் பாலசூரியா,
0094 718381581 - திருமதி பிரியங்கி திசாநாயக்க,
00961 81485809 - ஃபஹத் ஹவா