காணாமல் போன பெண்ணை கொலை செய்தாக இளைஞர் மீது குற்றச்சாட்டு
ஒட்டாவாவைச் சேர்ந்த 54 வயதான ரேச்சல் டெஸ்ரோச்சர்ஸ் கடைசியாக மார்ச் 14 அன்று எல்ஜின் தெருவில் காணப்பட்டார்.

காணாமல் போன பெண்ணின் சடலத்தை ஒட்டாவா குப்பைக் கிடங்கில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அவரது மரணம் தொடர்பாக 35 வயதான இளைஞர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக ஒட்டாவா காவல்துறைச் சேவை தெரிவித்துள்ளது.
ஒட்டாவாவைச் சேர்ந்த 54 வயதான ரேச்சல் டெஸ்ரோச்சர்ஸ் கடைசியாக மார்ச் 14 அன்று எல்ஜின் தெருவில் காணப்பட்டார். அவர் கொல்லப்பட்டார் என்று நம்புவதற்கு காரணம் இருப்பதாகவும், அவரது உடல் உள்ளூர் குப்பைக் கிடங்கில் இருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அங்கு தேடுதல் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒட்டாவாவைச் சேர்ந்த ஜோசுவா பிளேர் என்ற அந்த இளைஞர், இரண்டாம் நிலை கொலை மற்றும் இறந்த உடலை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.