Breaking News
டான் பிரியசாத் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது
நவ சிங்கள தேசிய இயக்கத்தின் அழைப்பாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான டான் பிரியசாத் வெல்லம்பிட்டி லக்சந்த செவன வீடமைப்புத் தொகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (22) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசியல் செயற்பாட்டாளர் டான் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடையவர் என நம்பப்படும் ஒருவர் கொழும்பு சினமன் கார்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நவ சிங்கள தேசிய இயக்கத்தின் அழைப்பாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான டான் பிரியசாத் வெல்லம்பிட்டி லக்சந்த செவன வீடமைப்புத் தொகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (22) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆரம்பத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், காயங்களின் கடுமை காரணமாக சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.