Breaking News
ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாடே மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஜப்பான் கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மூன்று மீட்டர் உயரத்திற்கு ஏற்பட்ட அலைகளுடன் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது. இது மக்களை பீதியில் ஆழ்த்தியது என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11:15 மணியளவில் ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதியை உலுக்கியதைத் தொடர்ந்து ஹொக்கைடோ, அமோரி மற்றும் இவாடே மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.





