Breaking News
கோவில் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் திலீப் விலகினார்
சர்ச்சையைத் தொடர்ந்து, முதலில் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியை கோயில் அதிகாரிகள் புதன்கிழமைக்கு மாற்றினர்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த கோயில் நிகழ்ச்சியில் இருந்து மலையாள நடிகர் திலீப் விலகினார். எர்ணாகுளம் சிவன் கோவிலில் முதல் கூப்பனைப் பெற்று திருவிழா கூப்பன் விநியோகத்தை திலீப் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
சர்ச்சையைத் தொடர்ந்து, முதலில் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியை கோயில் அதிகாரிகள் புதன்கிழமைக்கு மாற்றினர். இந்த நிகழ்ச்சியில் திலீப் பங்கேற்க மாட்டார். அவரது அழைப்புக்கு ஏற்பாட்டுக் குழுவில் இருந்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
மலையாள நடிககை மீதான பாலியல் தாக்குதல் வழக்கு தொடர்பான சமீபத்திய நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு நடிகரைச் சுற்றி அதிகரித்த பொது விமரிசனத்திற்கு மத்தியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.





