Breaking News
மேலும் 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
எலியா கோஹன், தால் ஷோஹம், ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல்-சயீத் மற்றும் அவேரா மெங்கிஸ்து ஆகியோர் விடுவிக்கப்படுபவர்கள்.
16 மாத காசா போரை இடைநிறுத்த எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மேலும் ஆறு இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் சனிக்கிழமை விடுவித்தது.
எலியா கோஹன், தால் ஷோஹம், ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல்-சயீத் மற்றும் அவேரா மெங்கிஸ்து ஆகியோர் விடுவிக்கப்படுபவர்கள்.
விடுவிக்கப்பட்ட ஆறு பணயக் கைதிகளில், எலியா கோஹன், 27, ஓமர் ஷெம் டோவ், 22, மற்றும் ஓமர் வென்கெர்ட், 23, ஆகியோர் குழுவின் அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது தெற்கு இஸ்ரேலில் நோவா இசை விழா நடந்த இடத்திலிருந்து ஹமாஸால் கடத்தப்பட்டனர். மத்திய காசாவின் நுசைராட்டில் இருந்து இஸ்ரேலிய படைகளிடம் ஒப்படைப்பதற்காக அவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.





