Breaking News
ஈரான்-ரஷ்யா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது
ஈரானில் சிறிய அணு மின் நிலையங்களை நிர்மாணிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ரோசாடோம் புதன்கிழமை அறிவித்தது.
ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோசாட்டோம் உடன் 4 அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான 25 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் ஈரான் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளது.
ஈரானில் சிறிய அணு மின் நிலையங்களை நிர்மாணிப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ரோசாடோம் புதன்கிழமை அறிவித்தது.
தென்கிழக்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் சிரிக் பிராந்தியத்தில் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஜெனரேஷன் III ஆலைகளை நிர்மாணிப்பதை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியது. இந்த ஆலைகள் 5,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாஸ்கோவில் கையெழுத்தானது.





