கனடா விமான நிலையத்தில் பாரியளவில் மெத்தம்பேட்டமைன் மீட்ப
ஒரு பயணப் பையினுள் தனித்தனியாக சுற்றப்பட்ட மூன்று பொதிகள் இருந்தன. அவற்றில் மொத்தம் 15.5 கிலோகிராம் எடையுள்ள படிக வடிவிலான போதைப்பொருள் இருந்தது.
கனடாவின் கல்கரி சர்வதேச விமான நிலையத்தில் (YYC) சுமார் 7.5 லட்சம் டாலர்களுக்கும் அதிக மதிப்புள்ள 'கிரிஸ்டல் மெத்' (Crystal Meth) போதைப்பொருள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில், கனடா வான்வழி போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் (CATSA) சோதனையின் போது இந்த போதைப்பொருள் கண்டறியப்பட்டது. சோதிக்கப்பட்ட ஒரு பயணப் பையினுள் தனித்தனியாக சுற்றப்பட்ட மூன்று பொதிகள் இருந்தன. அவற்றில் மொத்தம் 15.5 கிலோகிராம் எடையுள்ள படிக வடிவிலான போதைப்பொருள் இருந்தது.
அந்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 780,000 டொலர்கள் என காவல்துறை மதிப்பிட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, வன்கூவர் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஒரு விமானத்திற்குள் புகுந்த காவல்துறையினர், சந்தேக நபரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் வன்கூவர் வழியாக நியூசிலாந்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர் 38 வயதான லாயிட் டீ மாட்டாஃபா (Lloyd Tei Mataafa) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏற்றுமதி செய்ய முயன்றது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





