Breaking News
கெஹெல்பத்தர பத்மேயிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றவர் கைது
மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையின்போது துப்பாக்கியுடன் 13 துப்பாக்கிரவைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கெஹெல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாதக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையின்போது துப்பாக்கியுடன் 13 துப்பாக்கிரவைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹீனட்டியன மகேஷ் என்பவர் குறித்த தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் அச்சுறுத்தல் தொடர்பில் இத்தொழிலதிபர் கெஹெல்பத்தர பத்மேவுக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் கெஹெல்பத்தர பத்மே குறித்த தொழிலதிபருக்கு துப்பாக்கியை வழங்கியதாகவும் அதற்காக தொழிலதிபர், கெஹெல்பத்தரவுக்கு 350,000 ரூபா வழங்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





