வங்கதேசத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று தேர்தல் நடைபெறும்
வங்கதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி) நசிருதீன் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்,
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் பொதுத் தேர்தலைக் குறிக்கும் வகையில், பிப்ரவரி 12, 2026 அன்று 13 வது தேசிய நாடாளுமன்றத் தேர்தலை நடத்தப்போவதாக வங்கதேசம் வியாழக்கிழமை அறிவித்தது.
வங்கதேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் (சிஇசி) நசிருதீன் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார், "சுதந்திரமான மற்றும் ஜனநாயக வாக்களிப்பை" நடத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க நாடு தயாராக உள்ளது என்று கூறினார்.
போலி செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தேர்தலுக்கு முன்னதாக அவை ஒரு பெரிய சவால் என்று கூறினார். பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு மற்றும் ஜூலை சாசன அனைத்து மக்கள் வாக்கெடுப்பு பிப்பிரவரி 12 அன்று ஒரே நேரத்தில் நடைபெறும் என்பதை தலைமை தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தினார். மொத்தம் 300 நாடாளுமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெறும், வெளிநாடு வாழ் வங்கதேசத்தவர்கள் நாளை முதல் டிசம்பர் 25 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.





