கங்கனா ரணாவத்தின் விவசாயிகள் எதிர்ப்புக் கருத்தில் உடன்பாடில்லை: பாஜக
விவசாயிகள் போராட்டத்தின் போது உடல்கள் தூக்கில் தொங்குவதாகவும், பாலியல் பலாத்காரம் நடப்பதாகவும் அவர் தனது காணொலியைப் பகிர்ந்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து எம்.பி கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துக்களிலிருந்து பாஜக திங்கள்கிழமை தன்னை விலக்கிக் கொண்டது. நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய கங்கனா ரணாவத் எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
"விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாஜக எம்.பி கங்கனா ரனாவத் கூறிய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை. அவரது கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி தனது அதிருப்தியை தெரிவித்துக் கொள்கிறது" என்று பா.ஜ.க. கூறியது.
"கங்கனா ரணாவத் கட்சி சார்பாக கொள்கை விஷயங்களில் பேச அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்ய அனுமதியும் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு திருமதி ரணாவத்துக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தின் போது உடல்கள் தூக்கில் தொங்குவதாகவும், பாலியல் பலாத்காரம் நடப்பதாகவும் அவர் தனது காணொலியைப் பகிர்ந்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவு இருந்தபோதிலும், போராட்டங்களைத் தொடர்வதற்கு சுயநலவாதிகள் மற்றும் "வெளிநாட்டு சக்திகள்" தொடர்கின்றன என்று கங்கனன் மேலும் குற்றம் சாட்டினார்.





