அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மாநாயக்க தேரர்களை சந்தித்த ரணில்
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில், தான் தற்போது அரசியலில் இல்லை என்று தெரிவித்து அங்கிருந்து சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய ஆகிய இரு பீடங்களினதும் மாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
கண்டிக்கு 23-01-2026 அன்று விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மா நாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோரை சந்தித்துள்ளார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து மா நாயக்க தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாநாயக்கர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில், தான் தற்போது அரசியலில் இல்லை என்று தெரிவித்து அங்கிருந்து சென்றுள்ளார்.
இதன்போது, தற்போதைய சட்டமா அதிபரை நீக்குவதற்கான நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய போதிலும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.





