இலங்கை விஜத்தை இரத்து செய்தார் ஷாருக்கான்
ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொள்வது முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தபோதும் துரதிஷ்டவசமாக, எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான ‘City of Dreams Sri Lanka’ வின் ஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, ‘பொலிவுட் கிங் கான்’ என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்துகொள்வது முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தபோதும் துரதிஷ்டவசமாக, எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் City of Dreams Sri Lanka-வின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கானை வரவேற்பதற்காக நீங்கள் பலர் ஆவலுடன் காத்திருந்தீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், உங்கள் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமடைந்ததை எங்களாலும் நன்கு உணர முடிகிறது.
அவரது ஆதரவுக்கும் நல்லெண்ணத்திற்கும் நாங்கள் தொடர்ந்து ஆழ்ந்த நன்றியுடன் இருக்கிறோம், மேலும் எதிர்காலத்தில் கானை City of Dreams Sri Lankaவுக்கு வரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
ஷாருக்கான் வருகை இரத்தாகியிருந்தாலும், City of Dreams Sri Lankaவின் ஆரம்ப விழா ஒரு முக்கிய கொண்டாட்டமாக திட்டமிட்டவாறு விமர்சையாக நடைபெறும். உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான கலைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
அவர்களது விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். எனவே, உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு இடமாக இலங்கையை உலகளவில் அங்கீகரிக்கச் செய்வதற்கான முக்கிய மைல்கல்லாக இந்த நிகழ்வை மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்." எனக் கூறினார்.